குமாரபாளையத்தில் இருசக்கர வாகனம் மோதி பெண் படுகாயம்

குமாரபாளையத்தில் நடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதி பெண் படுகாயமடைந்தார்.

Update: 2022-05-27 13:30 GMT

குமாரபாளையத்தில் நடந்து சென்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதி பெண் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் நாகம்மா 55, கூலி தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் கே.ஓ.என் தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த யமஹா கிரக்ஸ் இருசக்கர வாகனம் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார், வட்டமலை பகுதியை சேர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராஜா 53, என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News