வார்டுகளில் ஆய்வு செய்தார் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன்

குமாரபாளையம் நகராட்சி 9 மற்றும் 3வது வார்டுகளில் நகராட்சி சேர்மன் விஜய் கண்ணன் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-24 10:15 GMT

குமாரபாளையத்தில் 9வது வார்டில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பொறுப்பேற்ற நாள் முதல் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்து, தேவைப்படும் அத்தியாவசிய பணிகள் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். நேற்று 9வது வார்டு ராஜம் தியேட்டர் பகுதியில் ஆய்வு செய்தார். வார்டு கவுன்சிலர் விஜயா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி, வடிகால், குடிநீர் குழாய் உள்ளிட்ட பணிகள் செய்து தர கேட்டுக்கொண்டனர். அதிகாரிகளை வரவழைத்து, பணிகள் செய்து தர சேர்மன் அறிவுறுத்தினார். அதே போல் 3வது வார்டிலும் ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் வேல்முருகன் உடனிருந்தார்.

Tags:    

Similar News