குமாரபாளையத்தில் வி.எச்.பி. சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
குமாரபாளையம் வி.எச்.பி. சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் வி.எச்.பி. சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மாநில அமைப்பு செயலர் ராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
இதில் வழக்கறிஞர் தங்கவேல் பேசும்போது தீண்டாமை ஒரு போதும் கூடாது. அனைத்து தரப்பு நபர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கவும், பேசவும், பழகவும் வேண்டும். பிரிவினை கூடாது. சமத்துவம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக அவசியம் என்றார்.
இந்நிகழ்வில் கிருஷ்ணர் வேடமிட்டு வந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலர் வழக்கறிஞர் சரவணராஜன், மாவட்ட செயலர் சுகுமார், நகர தலைவர் கணேஷ்,சிவகாமசுந்தரம், பூபதி, லட்சுமிநாராயணன், ரகுபதி, அழகிரி, மகாதேவன், சரவணன், யோகேஸ்வரன், இந்திராணி, அமுதா, துர்கா, வாகினி உள்பட பலர் பங்கேற்றனர்.