குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி தடுப்பூசி பிரச்சாரம்
குமாரபாளையம் நகராட்சி சார்பில் 100 சதவீத நிறைவை நோக்கி தடுப்பூசி பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.;
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறுகையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசு குலுக்கல் நடத்தப்பட்டு, தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல பரிசுகள் பெற தேர்வானவர்கள் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. இவர்களுக்கான தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் உள்ளிட்ட பரிசுகள் நாளை 27ம் தேதி வழங்கப்படவுள்ளன.
குமாரபாளையம் பகுதியில் 66, 384 பேர் கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்களாக உள்ளனர். இதில் முதல் தவனை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 55, 098 பேர்கள். இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 24,722 பேர்கள். மீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் வரும் வாரம் நடைபெறும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி நிறைய பரிசுகள் பெற்றுக்கொள்ளலாம்.
சுகாதார பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் மூலம் 33 வார்டுகளில் தினமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், 100 சதம் நிறைவு பெறவும் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் இருக்கவும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.