குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி 20 இடங்களில் தடுப்பூசி முகாம்

குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி 20 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-07 15:00 GMT

நகராட்சி கமிஷனர் சசிகலா.

குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், குமாரபாளையம் பகுதியில் 66 ஆயிரத்து 384 பேர் கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்களாக உள்ளனர்.

இதில் முதல் தவனை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 62 ஆயிரத்து 160 பேர்கள். இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 41 ஆயிரத்து 543 பேர்கள். மீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு தடுப்பூசி முகாம் 20 இடங்களில் நாளை (8ம் தேதி) நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் தற்போது ஒமிக்ரான், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாத, நபர்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு தர வேண்டுகிறேன்.

சுகாதார பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் 33 வார்டுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டி தினமும் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் இருக்கவும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Tags:    

Similar News