சமரச பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவனின் உடலை வாங்கிய குடும்பத்தார்
குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பலியான மாணவரின் உடலை பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தார் பெற்றுக்கொண்டனர்.;
குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பலியான மாணவன் மதுரைவீரன்
குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பலியான மாணவரின் உடலை பிரேத பரிசோதனை முடிந்து அவரது குடும்பத்தார் பெற்றுக்கொண்டனர்.
குமாரபாளையம் தனியார் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கான வகுப்பு நேற்று தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சீனியர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் பேனர் கட்டுதல், அலங்கார வளைவுகள் அமைத்தல் ஆகிய பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அதே கல்லூரியில் டிப்ளோமா எலெக்ட்ரானிக் கம்யூனிகேசன் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மதுரைவீரன், 20, என்ற மாணவர் நேற்றுமுன்தினம் மாடியில் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.
இவர் பேனர் கட்டும் போது தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு, சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.அழைத்து வரப்பட்டார். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்ததாக கூறினார். இவரது உடல் குமாரபாளையம் ஜி.ஹெச். சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இவர் திருப்பூர் மாவட்டம், நல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் இந்த மாணவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவனின் குடும்பத்தார் அவரது உடலை வாங்க மறுத்து வந்தனர். கல்லூரி நிர்வாகம், போலீசார், மாணவனின் குடும்பத்தார் வசம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த நிலை நேற்று இரவு 09:00 மணி வரை நீடித்தது. அதன்பின் மாணவனின் உடலை அவரது குடும்பத்தார் பெற்றுக்கொண்டனர். சமாதான பேச்சுவார்த்தையில் ஏ.டி.எஸ்.பி.ராஜூ, டி.சி.பி. வின்சென்ட், இன்ஸ்பெக்டர் தவமணி உள்பட பல போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். ஜி.ஹெச். வளாகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.