டூவீலர் திருட்டு போலீசில் புகார்

குமாரபாளையம் அருகே டூவீலர் திருடப்பட்டதால் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2025-03-23 11:35 GMT

டூவீலர் திருட்டு

போலீசில் புகார்


குமாரபாளையம் அருகே டூவீலர் திருடப்பட்டதால் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் லட்சுமி நகரில் வசிப்பவர் அஜய்ராபின், 25. கூலி வேலை. மார்ச். 17 இரவு 11:30 மணியளவில், இவரது கறிக்கடை பின்புறம், இவரது யமஹா ஆர்.155, என்ற வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை 05:00 மணிக்கு எழுந்து வந்து பார்த்த போது, வாகனம் காணவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, போலீசார் காணாமல் போன வாகனத்தை தேடி வருகின்றனர்.

Similar News