குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் டூவீலர் மானியம் வழங்கும் விழா

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் டூவீலர் மானியம் வழங்கும் விழா சேர்மன் விஜய் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-05-17 13:45 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் விஜய்கண்ணன் 18 பயனாளிகளுக்கு டூவீலர் மானியம் வழங்கி வாழ்த்தி பேசினார்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு டூவீலர்கள் அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக விண்ணப்பம் செய்த பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் விழா குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று, 18 பயனாளிகளுக்கு மானியம் வழங்கி வாழ்த்தி பேசினார். பொறியாளர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், கிருஷ்ணவேணி, சியாமளா, நந்தினிதேவி, பாண்டிசெல்வி, விஜயா, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News