குமாரபாளையத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து இருசக்கர வாகனம் விபத்து

குமாரபாளையத்தில் மழை, பலத்த காற்றினால் அறுந்து விழுந்த மின் கம்பியால் டூவீலர் விபத்து ஏற்பட்டது.

Update: 2022-06-16 15:15 GMT

குமாரபாளையத்தில் மழை, பலத்த காற்றினால் அறுந்து விழுந்த மின் கம்பியால் டூவீலர் விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையத்தில் மழை, பலத்த காற்றினால் அறுந்து விழுந்த மின் கம்பியால் டூவீலர் விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையம் பகுதியில் சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் பெய்த மழை மற்றும் பலத்த காற்றினால் இடைப்பாடி சாலை, பாறையூர் பகுதியில் மின்கம்பத்தில் இருந்த மின் கம்பி, பனை மர ஓலைகள் விழுந்ததில் அறுந்து சாலையில் விழுந்தது. நேற்று காலை 06:00 மணியளவில் அவ்வழியே டூவீலரில் வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்தது கண்டு நிலை தடுமாறி, கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News