குமாரபாளையத்தில் டூவீலர் மோதி விபத்து - மூதாட்டி பலி

குமாரபாளையத்தில் டூவீலர் மோதிய விபத்தில், 75 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2021-12-07 05:15 GMT

சேலத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள், 75. இவர் நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில், சுந்தரம் நகர் பகுதியில் வசிக்கும் தனது மகளை காண வந்தார். நடந்து வந்து கொண்டிருந்தவர், அப்பகுதியில் சாலையை கடக்க முயற்சித்தபோது, அவ்வழியே வந்த டூவிலர், இவர் மீது மோதியது.

இதில், பலத்த அடிபட்டு அலறிய கண்ணம்மாளை,  சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது, குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News