வட்டார சுகாதார பேரவை கூட்டத்தில் இரண்டு சேர்மன்கள் பங்கேற்பு

பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற வட்டார சுகாதார பேரவை நிகழ்ச்சியில் இரு சேர்மன்கள் பங்கேற்றனர்

Update: 2022-09-10 15:30 GMT

பள்ளிபாளையத்தில் நடைபெற்ற வட்டார சுகாதார பேரவை நிகழ்ச்சியில் பள்ளிபாளையம், குமாரபாளையம் இரு சேர்மன்கள் பங்கேற்றனர்

பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற வட்டார சுகாதார பேரவை நிகழ்ச்சியில் இரு சேர்மன்கள் பங்கேற்றனர்.

பள்ளிபாளையம் நகராட்சி சமுதாய கூடத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வட்டார சுகாதாரத்துறை ஏற்பாட்டின் பேரில் வட்டார சுகாதார பேரவை கலந்தாய்வு கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவி தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், பள்ளிபாளையம் நகராட்சி சேர்மன் செல்வராஜ், பள்ளிபாளையம் நகராட்சி துணை தலைவர் பாலமுருகன், படைவீடு பேரூராட்சி தலைவி ராதாமணி செல்வன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

வட்டார அளவில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு, சித்த மருத்துவத்துறை, காச நோய் தடுப்பு பிரிவு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் சுகாதார திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துக்களின் வகைகள், தானியங்களால் ஆன உணவு பொருட்கள், மருத்துவத்துறை மூலம் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், ஊக்கத்தொகைகள் பற்றிய விளக்க கையேடுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. டாக்டர்கள் செந்தாமரை, திவ்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News