நடிகர் விவேக் மறைவுக்கு குமாரபாளையத்தில் கண்ணீர் அஞ்சலி

சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் மறைவுக்கு குமாரபாளையத்தில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2021-04-17 13:19 GMT

தமிழ் திரையுலகில் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்கள், கலைஞர்கள்,  அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுதவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பசுமை  ஆர்வலர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் நடிகர் விவேக் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும், நடிகர் விவேக் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. குமாரபாளையம், பள்ளிபாளையம் பிரிவில் தன்னார்வ அமைப்பினர் சார்பில், மறைந்த விவேக்கின் படத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பேசிய பலரும், நடிகர் விவேக் திரை உலகத்திற்கும் சமூகத்திற்கும் செய்த சமூகச்சேவைகளை நினைவுகூர்ந்து , சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நடும் பணியை நாமும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என உறுதிமொழி  எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News