கடைகளுக்கு சரக்கு இறக்கும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு

குமாரபாளையத்தில் கடைகளில் சரக்கு இறக்கும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

Update: 2022-06-02 13:45 GMT

குமாரபாளையத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக கடைகளில் சரக்கு இறக்கும் வாகனங்கள். 

குமாரபாளையத்தில்,  கடைகளில் சரக்கு இறக்கும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. குமாரபாளையம் - சேலம் சாலையில் உள்ள கடைகளுக்கு சரக்குகள் கொண்டு வரும் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனால் வாகன போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. சில சமயங்களில் கடைகளில் பொருட்கள் இறக்கும் வரை பல வாகனங்கள் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. இது போன்ற வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வந்து சரக்குகள் இறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News