குமராபாளையம் கொரோனா தொற்று பற்றிய இன்றைய விபரம்

குமாரபாளையத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

Update: 2021-04-29 14:00 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

ஒருவர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 30-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 78 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்! நோய் பரவலை தடுக்கும் வகையில் குமாரபாளையம் நகராட்சி வார்டுகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கிருமி நாசினி பவுடர் தெளிப்பது மற்றும் பொதுமக்களை முக கவசம் அணிந்து வெளியில் வரும் வகையில் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக குமாரபாளையம் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News