கத்திக்குத்து காயமடைந்தவர் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றம்

குமாரபாளையத்தில் கத்திகுத்து காயமடைந்த நபர் பலியானதால் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

Update: 2022-09-30 17:45 GMT

குமாரபாளையத்தில் கத்திகுத்து காயமடைந்த நபர் பலியானதால்  சம்பந்தப்பட்டவர் மீது கொலை வழக்காக மாற்றம் செய்து பதிவு செய்யப்பட்டது.

குமாரபாளையம் அருகே ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண், 31. கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் பின்னால் உள்ள சிவராஜ், 45, வீட்டிற்கு செப். 27 மாலை 01:30 மணியளவில் அருண் சென்ற போது,அங்கு சிவராஜுடன், கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த தங்கவேல், 60, என்பவர் சண்டை போட்டுகொண்டு இருந்துள்ளார்.

இதனை அருண் தட்டி கேட்க, ஆத்திரமடைந்த தங்கவேல் கட்டையால் அருண் தலையில் தாக்கியதுடன், கத்தியால் வயிற்றில் குத்தினார். இதனால் படுகாயமடைந்த அருணை அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஈரோடு ஜி.ஹெச்.ல் சேர்த்தனர். தங்கவேல் தலைமறைவானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலுவை தேடி வந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 02:30 மணியளவில் ஆனங்கூர் சாலை, மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த தங்கவேலுவை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர். நேற்று காலை 07:00 மணியளவில் கத்திக்குத்தில் காயமடைந்த அருண் இறந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது

Tags:    

Similar News