குமாரபாளையத்தில் பிரதமர் நீண்ட ஆயுள் பெற சிறப்பு யாகம் வழிபாடு

குமாரபாளையத்தில் தமிழ்நாடு விஷ்வஹிந்து பரிசத் சார்பில் பிரதமர் மோடி நீண்ட ஆயுள் ஆயுள் பெற சிறப்பு யாகம், வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-01-11 15:45 GMT

தமிழ்நாடு விஷ்வஹிந்து பரிசத் சார்பிலும், ஊர் பொதுமக்கள் சார்பிலும் பிரதமர் மோடி நீண்ட ஆயுள் ஆயுள் பெற சிறப்பு யாகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழ்நாடு விஷ்வஹிந்து பரிசத் சார்பிலும், ஊர் பொதுமக்கள் சார்பிலும் பிரதமர் மோடி நீண்ட ஆயுள் ஆயுள் பெற குமாரபாளையம் கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பிரதமர் மோடியின் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக கோட்ட செயலர் சபரிநாதன் பங்கேற்றார். குமாரபாளையம் நகர தலைவர் ராஜேந்திரன், ஊர் பெரியவர்கள் இளங்கோ, கார்த்திகேயன், ஜீவா, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News