சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களை விரட்டியடித்த பேருந்து நிலைய கடையினர்

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில், தங்கள் கடைகள் முன்பு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களை உரிமையாளர்கள் விரட்டியடித்தனர்.

Update: 2022-01-19 13:45 GMT

குமாரபாளையம்  பேருந்து நிலைய கடைகள் முன்பு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களை விரட்டியடித்த உரிமையாளர்கள். 

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கடையினர் தங்கள் கடை முன்பு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் நபர்களை விரட்டியடித்தனர்.

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். இவர்கள் பல ஊர்களிலிருந்து வந்தவர்களும் உள்ளனர். பலரால் கொண்டு வந்து இங்கு விடப்பட்டவர்களும் உள்ளனர். வயது முதிர்வு, ஆதரவு இல்லாமை, கடும் நோய், ஆகிய காரணங்களால் இவர்கள் இங்கு விடப்பட்டுள்ளனர்.

பேருந்து நிலைய கடைகள் முன்பு இரவு நேரத்தில் படுத்து தூங்குபவர்கள், பகலில் கடை திறக்கும் நேரம் வந்தாலும் எழுந்திருப்பதில்லை. மேலும் கடை முன்பே சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளை செய்து வருகின்றனர்.

இதனால் நோய்கள் பரவல் அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் வந்து எழுந்திருக்க சொன்னாலும் எழுந்திருப்பதில்லை. பலவிதமான காரணங்களால் பேருந்து நிலைய கடையினர் இதுபோன்ற சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் நபர்களை விரட்டியடித்தனர். இவர்களை பாதுகாப்பு மையத்தில் சேர்த்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுதுள்ளனர்.

Tags:    

Similar News