சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினர்

பள்ளிபாளையத்தில் சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினரை போலீசார் பாராட்டினர்.

Update: 2022-07-05 14:00 GMT

பள்ளிபாளையத்தில் சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை பா.ஜ.க. நிர்வாகிகள் போலீசில் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள்  பாலாஜி, மருத்துவர் லோகேஸ்வரன், சுமை தூக்கும் தொழிலாளி மணி. இவர்கள் ராசிபுரத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று விட்டு பள்ளிபாளையம் திரும்பி வந்தனர். ஓட்டமெத்தை பகுதி வந்த போது, அங்கு மணிபர்ஸ் கீழே கிடந்தது. அதனை எடுத்து பார்த்த போது அதில் தங்க செயின், வளையல் உள்ளிட்ட 8 பவுன் நகைகள் இருந்தன. அதனை பள்ளிபாளையம் போலீசாரிடம் இவர்கள் ஒப்படைத்தனர். நகைகளை ஒப்படைத்த நபர்களை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உள்ளிட்ட போலீசார் பாராட்டினர்.

Tags:    

Similar News