கோயில் திருவிழா கணக்கை பேனர் மூலம் சமர்ப்பித்த நிர்வாகம்: பொதுமக்கள் வரவேற்பு
குமாரபாளையத்தில் கண்ணகி நகர் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கணக்கை பேனர் மூலம் கணக்கு சமர்ப்பித்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.;
குமாரபாளையத்தில் கண்ணகி நகர் மாரியம்மன் கோயில் நிர்வாகத்தினர் மாசித் திருவிழா கணக்கை பிளெக்ஸ் மூலம் கணக்கு சமர்ப்பித்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரில் காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா பிப். 22ல் தொடங்கி மார்ச் 13ல் நிறைவு பெற்றது. நகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் இந்த திருவிழா நடைபெற்றது.
வழக்கமாக கோவில் திருவிழாவில் பொதுமக்களிடம் பணம், அன்னதானத்திற்கு அரிசி, பருப்பு ஆகியவை வசூல் செய்வார்கள். திருவிழா முடிந்ததும் ஊர் பெரியவர்களை அழைத்து கணக்கு காட்டுவார்கள். சில கோவில்களில் அதுவும் காட்ட மாட்டார்கள். அப்படியிருக்க, குமாரபாளையம் உழவர் சந்தை பின்புறம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா செலவு கணக்கை பிளெக்ஸ் பேனர் மூலம் அந்த பகுதியில் பல இடங்களில் பொதுமக்களுக்கு தெரியும்படி கட்டியுள்ளனர்.
இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது போல் அனைத்து கோவில்களிலும் பின்பற்றினால் நல்லது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.