தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம்
குமாரபாளையத்தில் தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது.;
தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.
குமாரபாளையத்தில் தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க நிர்வாக குழு கூட்டம் மாநில செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடந்தது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்று மாநில அளவில் ஏழை விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களால் விதிக்கப்படும் அதிப்படியான வட்டி முறைகளால் கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களுக்கு, இரண்டாம் தேதிக்கு மேல் ஏலம், ஜப்தி, நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த கூட்டம் நடந்தது.
தமிழக அரசு 2016 தேர்தல் வாக்குறுதி படி, வட்டி, அபராத வட்டி, முழுமையாக தள்ளுபடி செய்து, அசலை மட்டும் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் விரோத ஏலம், ஜப்தி போன்ற காரியங்களை எப்போதும் செய்யக் கூடாது, அதிகப்படியான வட்டி, அபராத வட்டிகளை தள்ளுபடி செய்து, அசலை மட்டும், தவணை முறையில் செலுத்த அரசு உத்தரவிட வேண்டும், அடமான கடன் பெற்றவர்களுக்கு எந்த அரசும் இதுவரை எந்த சலுகையும் வழங்கவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அடமான கடன் பெற்றவர்களுக்கும் வட்டி, அபராத வட்டிகளை தள்ளுபடி செய்து, அசலை மட்டும், தவணை முறையில் செலுத்த அரசு உத்திரவிட வேண்டும், ஏலம் ஜப்தி மூலமாக கைப்பற்றியுள்ள சொத்துக்களை உறுப்பினர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும், இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.