பூட்டிய பள்ளிக்குள் மாணவன் அலறல் சத்தம்: குமாரபாளையத்தில் பரபரப்பு

குமாரபாளையத்தில் உடல்நிலை சரியில்லாத மாணவனை பள்ளிக்குள் வைத்து ஆசிரிய, ஆசிரியைகள் பூட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-23 17:00 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் சந்துரு, 16. இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் பள்ளியில் உள்ள தனி அறையில் உறங்கியதாக கூறப்படுகிறது.

பள்ளி வேலை நேரம் முடிந்ததும் அனைவரும் பள்ளியின் வகுப்பறைகள், முன்புற மெயின் கேட் எல்லாம் பூட்டி விட்டு சென்று விட்டனர். நேற்று இரவு 09:20 மணியளவில் பள்ளியின் உள்ளே இருந்து மாணவனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

உடனடடியாக அக்கம் பக்கத்தினர் பள்ளியின் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆசிரியர்கள் சிலர் கதவை திறந்து மாணவனை வெளியே அனுப்பி வைத்தனர்.

ஆசிரிய, ஆசிரியைகளின் இந்த மெத்தனப்போக்கு பொதுமக்களை அதிருப்தியடைய வைத்தது. மாணவனுக்கு தாய் இல்லை. தந்தை விசைத்தறி கூலித்தொழிலாளி. தினமும் வேலை முடிந்து இரவு 09:30 க்குத்தான் வருவார் என்பதால் அவருக்கும், தன் மகன் வீட்டுக்கு வராத தகவல் தெரியாமல் போனது.

Tags:    

Similar News