குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம்

ஐப்பசி சனிக்கிழமையை முன்னிட்டு குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Update: 2021-10-23 13:30 GMT

குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

ஐப்பசி சனிக்கிழமை நாளையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

மேலும் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில், கோட்டைமேடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாமோதரசுவாமி கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News