குமாரபாளையம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்- வழிபாடு

குமாரபாளையத்தில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-05-15 13:00 GMT

குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அக்ரஹாரம்  லட்சுமிநாராயண சுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் பக்தி பஜனை பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சேநேயர் கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன.

Tags:    

Similar News