மின் ஊழியரை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி காவல் நிலைய முற்றுகை
#Siege of a police station #demanding registration of a case #electrical worker;
பள்ளிபாளையம் கோட்டம்,குமார பாளையம் உப கோட்டம் குப்பான்டாபாளையம் மின் பிரிவில் பணிபுரியும் சுப்பிரமணி நேற்று(06.05.2021)மாலை பராமரிப்பு சமயசங்கிலி பகிர்மானத்தில் கருப்பனார் கோயில் அருகில் பணிகள் மேற் கொன்டு இருந்த நேரத்தில் மின் நுகர்வோர் சுரேஷ் என்பவர் தகாத வார்த்தைகளில் பேசி கடுமையாக தாக்கி அடித்து விட்டதாகவும் மேலும் இரு சக்கர வாகனத்தின் சாவியையும் எடுத்துக்கொன்டதாகவும் கூறி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிபாளையம் காவல் நிலையத்தை இன்று மாலை மின்சார ஊழியர்கள் மற்றும் மின்வாரிய சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர் இதன் பிறகு சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது