பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கல்

பள்ளிபாளையம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை,பொருள்கள் வழங்கப்பட்டன

Update: 2021-07-16 13:45 GMT

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

கொரோனா 2-வது அலை கால கட்டத்தில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில், தொற்று ஏற்பட்டவர்களுக்கு  சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தங்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் பணியாற்றினர்.

அவ்வாறு  மருத்துவ பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள்,108  ஆம்புலன்ஸ் பனியாளர்கள், மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர்க்கு, அவர்களது சேவையை பாராட்டி அவர்களை உற்சாகபடுத்தும் வகையில் பள்ளிபாளையம் ஒன்றிய நகர  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில்,  நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் தலைமையில்  ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் வி.பி. சாமி முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் கே.ஜி. வெங்கடேஷ் வரவேற்றார்.  கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி. குப்புசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு ஒருங்கிணைந்த ஒன்றிய தலைவர் ரெயின்போ பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News