குமாரபாளையத்தில் மழையால் தணிந்த வெப்பம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

குமாரபாளையத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2022-04-23 12:30 GMT

குமாரபாளையத்தில் கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அக்னி நட்சத்திரம் போல் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வரவே அஞ்சும் நிலை குமாரபாளையத்தில் இருந்து வருகிறது.

சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 04:00 மணியளவில் குளிர் காற்றுடன் கன மழை பெய்தது.

இது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் கடும் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News