குமாரபாளையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மார்ச் 5 மின் நிறுத்தம்

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச் 5 மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-03-03 16:00 GMT

காட்சி படம் 

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக குமாரபாளையம் பகுதியில் மார்ச் 5ல் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில், குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மார்ச் 5 காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதன் காரணமாக குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், வேமன் காட்டுவலசு, சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News