சமயசங்கிலி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக 10ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2021-11-08 10:45 GMT

பைல் படம்.

குமாரபாளையம் அருகே சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வரும் 10ம் தேதி காலை 09:00 மணி முதல் மாலை 02:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில், சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறத என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News