குமாரபாளையத்தில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்: மின்வாரியம் அறிவிப்பு

குமாரபாளையத்தில் செப். 15ல் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-13 14:00 GMT

பைல் படம்.

குமாரபாளையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக செப்டம்பர் 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறுகிறது.

இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை குமாரபாளையம் நகரம், சடையம்பாளையம், டி.வி. நகர், புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, கோட்டைமேடு மற்றும் வளையக்காரனூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News