குமாரபாளையம் கடைகளில் மது குடிக்க அனுமதி: இருவர் கைது

குமாரபாளையத்தில் மது குடிக்க அனுமதித்தற்காக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-23 15:15 GMT

குமாரபாளையத்தில் மது குடிக்க அனுமதித்தற்காக இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் சுற்றியுள்ள பல இடங்களில் மது குடிக்க அனுமதிப்பதாக தகவல் கிடைத்து, குமாரபாளையம் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கோட்டைமேடு பகுதியில் பெட்டிக்கடை அருகில் கிருஷ்ணன் 35, வட்டமலை ஓட்டல் கடையில் மது குடிக்க அனுமதித்த இளங்கோ 46, ஆகிய இருவரையும் எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News