பவுர்ணமி தின சிறப்பு வழிபாடு
பவுர்ணமி தினத்தையொட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது;
பவுர்ணமி தின
சிறப்பு வழிபாடு
பவுர்ணமி தினத்தையொட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பவுர்ணமி தினத்தையொட்டி குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, தினசரி கட்டளைதாரர் சிறப்பு வழிபாடு, அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று பவுர்ணமியன்று போயர் சமூக பெருமக்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, அம்மன் திருவீதி உலா, அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், கத்தேரி சமத்துவபுரம் சிவன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
படவிளக்கம் :
பவுர்ணமி தினத்தையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் போயர் சமூக பெருமக்கள் சார்பில் அம்மன் திருவீதி உலா நடந்தது.
படவிளக்கம் :
பவுர்ணமி தினத்தையொட்டி குமாரபாளையம் அருகே கத்தேரி சமத்துவபுரம் சிவன் கோவிலில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
படவிளக்கம் :
பவுர்ணமி தினத்தையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவிலில், amman சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.