பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்கத்திற்கு ஆய்வு

பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சாலை மற்றும் மேம்பாலம் விரிவாக்கத்திற்கு ஆய்வு நடைபெற்று வருகிறது.

Update: 2021-04-29 09:53 GMT

பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்கம் செய்வது குறித்த ஆய்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சாலை, சேலம், நாமக்கல், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் சாலையாக உள்ளது!

மக்கள் தொகைக்கேற்ப வாகன எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் காலை நேரங்களில்  அவ்வப்போது சிறிய அளவிலான விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு பல மணி நேரம் வாகனங்கள் சாலையில் தேங்கி நிற்கும்சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. எனவே, பள்ளிபாளையம் சாலை போக்குவரத்துக்கு போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தின் தேவையை கருதி  தொலைநோக்கு பார்வையுடன் பள்ளிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் அமைப்பது, சாலை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அதற்காக,கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய, மாநில அரசு அனுமதியுடன் சாலை விரிவாக்க பணி ஆய்வு தொடங்கியது.  இந்நிலையில் இன்று காலை பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தும் இடமான  நால்ரோடு பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்கான பணியினை ஊழியர்கள் மேற்கொண்டனர்.  இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, தொடர்ச்சியாக சாலை விரிவாக்க பணி குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.  ஆய்வு முடிவுகளை மேல்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம்.  அவர்கள் அனுமதி கிடைத்த பிறகு அடுத்த கட்ட நகர்வுகள் தொடங்குவோம் என தெரிவித்தனர். இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

Similar News