பள்ளிபாளையம்: கள்ளத்துப்பாக்கி, மதுபாட்டில் வைத்திருந்த இருவர் கைது

பள்ளிபாளையத்தில், 51 மதுபாட்டில்கள் மற்றும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-17 15:42 GMT

கடத்தப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில்,  பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் இன்று, பள்ளிபாளையம் கொக்கராயன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது, கொக்கராயன்பேட்டை பாரதி நகரைச் சேர்ந்த சக்திவேல்-34,  அவரது வீட்டு முன்பு கையில் துப்பாக்கியை துடைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் கோடீஸ்வரன்-33, என்பவர் கையில் மதுபாட்டிலுடன் இருந்தார். போலீசாரை கண்டதும், இருவரும் தப்ப முயன்றனர்.

சுற்றி வளைத்து அவர்கள் இருவரை பிடித்து விசாரித்ததில், ஊரடங்கில் மதுபான பாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும், அத்துடன், துப்பாக்கி உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார்,  துப்பாக்கி, ஏர்கன் மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த 51 மது பாட்டில்கள் கைப்பற்றினர்.

Tags:    

Similar News