பள்ளிபாளையத்தில் ஜூன் 28ல் மின் விநியோகம் நிறுத்தம்

பள்ளிபாளையத்தில் ஜூன் 28ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-24 15:00 GMT

பள்ளிபாளையத்தில் ஜூன் 28ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் ஜூன் 28ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வரப்பாளையம், வெள்ளிக்குட்டை, ஆவாரங்காடு, அலமேடு, புதுப்பாளையம், ஆலாம்பாளையம், எஸ்.பி.பி.காலனி, அண்ணா நகர், காடச்சநல்லூர், தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஒடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்காராயண்பேட்டை, பட்லூர், இறையமங்கலம், உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 09:00 முதல் 02:00 வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News