வெளி மாநில லாட்டரி விற்ற வழக்கில் இருவர் கைது
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.;
வெளி மாநில லாட்டரி விற்ற
வழக்கில் இருவர் கைது
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்ற
வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜன் ஆகியோர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சரஸ்வதி தியேட்டர் ரோடு, பெராந்தர்காடு ஆகிய பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்றுமுன்தினம் மாலை 03:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், லாட்டரி விற்ற, அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ராமலிங்கம், 27, பரமசிவன், 58, ஆகியோரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.