குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-04 14:00 GMT

குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் பெரியார் நகரில் வசிப்பவர் ஆறுமுகம், 60. வீட்டில் இருப்பவர். இவர் நேற்று காலை 11:30 மணியளவில் சொந்த வேலையாக, தனது ஹீரோ ப்ளீசர் இருசக்கர வாகனத்தில், சேலம்-கோவை புறவழிச்சாலையில், கத்தேரி பிரிவில் சாலையை கடக்கும் போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார் ஒன்று இவரது வாகனத்தின் மீதி மோதியதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்து குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் சேலம், சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனராக வேலை செய்யும் ஐவதீஸ்வரன் 32, என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News