மது போதையில் தூக்கு மாட்டி ஒருவர் பலி

குமாரபாளையம் அருகே கூலித் தொழிலாளி மது போதையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-04 12:45 GMT

பைல் படம்

குமாரபாளையம் அருகே கத்தேரி பகுதியில் வசிப்பவர் துரைசாமி, 38, கூலித்தொழிலாளி. இவர் வீட்டில் யாரும் இல்லாத போது நேற்று முன் தினம் இரவு 10:30 மணிக்கு மது போதையில் தூக்கு மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. இவரை சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு கொண்டு வந்த போது, ஏற்கனவே உயிரிழந்ததாக இவரை பரிசோதித்த டாக்டர் கூறினார். இது குறித்து தேவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News