வாய்க்காலில் தண்ணீர் திருட்டு; குழாய்களை அகற்றிய அதிகாரிகள்

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் தண்ணீர் திருட பயன்படுத்திய குழாய்களை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2024-09-21 16:15 GMT

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் தண்ணீர் திருட பயன்படுத்திய குழாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

வாய்க்காலில் தண்ணீர் திருட்டு; குழாய்களை அகற்றிய அதிகாரிகள்

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் தண்ணீர் திருட பயன்படுத்திய குழாய்களை அதிகாரிகள் அகற்றினர்.

குமாரபாளையம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, குமாரபாளையம் அருகே வெள்ளப்பாறை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு, சொந்த பயன்பாட்டிற்கு மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் குழாய்கள் பதித்து, மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு தண்ணீர் திருடப்படுவதாக குமாரபாளையம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் சென்று, தண்ணீர் திருட்டுக்கு பயன்படுத்தி வந்த குழாய்களை முற்றிலும் அகற்றினர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News