அக். 5ல் சமயசங்கிலியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்

குமாரபாளையம் அருகே அக். 5ல் சமயங்கிலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2024-10-03 10:30 GMT

குமாரபாளையம் அருகே அக். 5ல் சமயங்கிலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பிற்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அக். 5ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர்.நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி ரோடு, பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News