குமாரபாளையம் நகராட்சியில் மார்ச்.2ல் புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மார்ச்.2ல் பதவியேற்பு, மார்ச்.4ல் தலைவர், துணை தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.

Update: 2022-02-24 02:55 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மார்ச் 2ல் பதவியேற்பு, மார்ச் 4ல் தலைவர், துணை தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.

குமாரபாளையம் நகர்மன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 பேர் போட்டியிட்ட நிலையில், தி.மு.க. 14, அ.தி.மு.க. 10, சுயேச்சை 9, எனும் விதத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 33 நகர்மன்ற உறுப்பினர்கள் மார்ச் 2ல் பதவியேற்க உள்ளனர்.

மார்ச் 4ல் காலையில் நகரமன்ற தலைவர் தேர்தல், மாலையில் நகரமன்ற துணை தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சியினரும் சுயேச்சையினரை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தர கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News