குமாரபாளையம் நகராட்சி புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

குமாரபாளையம் நகராட்சியின் புதிய கமிஷனராக, விஜயகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2022-05-03 11:30 GMT

குமாரபாளையம் நகராட்சியின் புதிய கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட விஜயகுமார்.

குமாரபாளையம் நகராட்சி கமிஷனராக இருந்த சசிகலா,  விருத்தாசலத்திற்கு பணியிட மாறுதலில் சென்றார். இவருக்கு பதிலாக,  சென்னை தலைமை செயலக அலுவலர் விஜயகுமார்,  குமாரபாளையம் நகராட்சி கமிஷனராக நியமனம் செய்யபட்டார்.

இவர், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட கவுன்சிலர்கள், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் இயற்கைபிரியன், உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News