குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அதிமுகவினர் மரியாதை

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2021-12-24 10:30 GMT

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிப்பு -நிகழ்வில் அ.தி.மு.க. வினர் பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வழிகாட்டுதல்படி குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது. ஆனங்கூர் பிரிவு சாலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை நடைபெற்ற மவுன ஊர்வலத்திற்கு நகர செயலர் நாகராஜன் தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலர் புருஷோத்தமன்  ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நகர செயலர் நாகராஜன் நகர துணை செயலர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர செயலர் குமணன், பழனிச்சாமி, சேகர் ஜூவல்லர்ஸ் தனசேகரன், முன்னாள் நகரமன்ற துணை தலைவர் பாலசுப்ரமணி, ராஜா, விஸ்வநாதன், சேகர், தொழில் நுட்ப பிரிவு நகர தலைவர் சிங்காரவேல், மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News