குமாரபாளையத்தில் பைக் சாவியால் சரமாரியாக கண்ணை குத்தியவர் கைது

குமாரபாளையத்தில் பைக்குகள் மோதிய தகராறில் சாவியால் கண்ணை குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-30 15:15 GMT

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம், கலைமகள் வீதியில் வசிப்பவர் விஜய் ஆனந்த், வயது 32. இவரது மனைவியின் உடல்நிலை சரியில்லாமல் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள மனைவியை பார்த்து விட்டு வந்த விஜய் ஆனந்த்,  இரவு 9:00 மணியளவில் கலைமகள் வீதி, காளியம்மன் கோயில் இறக்கத்தில் பைக்கில் வந்த போது, எதிரே பைக்கில் வந்த விக்னேஷ்,வயது 21, விஜய் ஆனந்த் வந்த பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றார்.

இவரை பின் தொடர்ந்து சென்ற விஜய் ஆனந்த், அரிசிக்காரர் முருகேசன் வீடு அருகே விக்னேசிடம், இப்படி மோதி விட்டு நிற்காமல் வரலாமா? என கேட்டுள்ளார். ஆத்திரத்தில் தகாத வார்த்தையால் திட்டிய விக்னேஷ், தன்னிடம் உள்ள சாவியால் விஜய் ஆனந்தின் வலது கண்ணில் குத்தியும், புருவம் மீது குத்தியும் காயம் ஏற்படுத்தினார்.

இதனால் பலத்த காயமடைந்த விஜய் ஆனந்த்தை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விக்னேஷை கைது செய்தனர்.

Tags:    

Similar News