குமாரபாளையம் நகராட்சி கழிவறையில் ஆண் சடலம், கொலையா, போலீஸ் விசாரணை

குமாரபாளையத்தில் நகராட்சி கழிவறையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-08-29 17:45 GMT

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்

குமாரபாளையம் கம்பன் நகரில் நகராட்சி பொதுக்கழிப்பிடம் உள்ளது.  இரவு 10:45 மணியளவில் அபப்குதியை சேர்ந்த ஒருவர் கழிப்பிடம் சென்ற போது, அருகில் இருந்த கழிவறையில் துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளார்.

இது பற்றி குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, நேரில் சென்ற போலீசார் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டனர். இறந்தவர் பெயர், விபரம் தெரியவில்லை. கழிப்பிடம் வந்த இடத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இது நடந்து பழ நாட்கள் ஆனதால் துர்நாற்றம் வீசியுள்ளது. பொதுக்கழிப்பிடம் பராமரிப்பவர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்வதில்லை. தினமும் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்திருந்தால் ஒரே நாளில் இந்த இறப்பு குறித்து தகவல் கிடைத்திருக்கும்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார்  எப்படி இறந்தார், ஏன் இறந்தார், ஏன் அந்த அறை சுத்தம் செய்யவில்லை, என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகிறனர்.

Tags:    

Similar News