குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த லாரி ஓட்டுநர் தலைமறைவு: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த லாரி ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-01-24 14:15 GMT

குமாரபாளையம் பூசாரிக்காடு பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார், 29. லாரி ஓட்டுனர். இவர் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்து, எஸ்.ஐ. மலர்விழி மற்றும் போலீசார் மாலை 04:00 மணியளவில் நேரில் சென்றனர்.

போலீசார் வருவதையறிந்ததும் அவர் தலைமறைவானார். அவரது வீட்டில் போலீசார் தேடியதில் குளியல் அறையில் 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நபரை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News