குமாரபாளையத்தில் எல்.ஈ.டி. விளக்கு கம்பங்கள் அமைக்கும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில், எல்.ஈ.டி. விளக்குகள் கம்பம் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.

Update: 2021-10-06 04:16 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், எல்.இ.டி. தெரு விளக்கிற்கான கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், குமாரபாளையம் ராஜம் தியேட்டர் முதல்,  பள்ளிபாளையம் பிரிவு வரையில்,  சேலம் சாலையில் எல்.ஈ.டி. விளக்கு கம்பங்கள் அமைக்கும் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது.


இது குறித்து, குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: குமாரபாளையம் நகராட்சியில்,  சாலை பாதுகாப்பு பணிக்காக 2 கோடி நிதி, மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாரச்சந்தை முதல்,  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலான சாலை, ஐயன் தோட்டம் சாலை, அம்மா உணவகம் சாலை ஆகிய 3 சாலைகளும், புதிய தார் சாலையாக மாற்றப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறப்பட்டு, தற்போது சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எல்.ஈ.டி. விளக்குகள் கம்பங்கள், டிவைடர்கள் இடையில் நிறுவப்பட்டு வருகிறது. ஒரு கம்பத்திற்கு 2 எல்.ஈ.டி. விளக்குகளும், சில இடங்களில் ஒரு கம்பத்திற்கு ஒரு எல்.ஈ.டி. விளக்கும் ஆக 129 விளக்குகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News