குமாரபாளையம் இன்னர்வீல் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

குமாரபாளையம் இன்னர்வீல் சங்கம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2021-08-17 15:00 GMT

குமாரபாளையம் இன்னர்வீல் சங்கம் சார்பில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜை.

குமாரபாளையம் ரோட்டரி சங்கம், இன்னார் வீல் சங்கத்தின் சார்பில் பல்வேறு மருத்துவ முகாம்கள், குமாரபாளையம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம், மேற்கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட பல  நலத்திட்ட பணிகள் செய்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக ஆன்மிக வழியில் உலக நன்மை வேண்டி ரோட்டரி சங்க கட்டிடத்தில் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இந்த பூஜைக்கு இன்னர்வீல் சங்க தலைவி சுதா, ரோட்டரி சங்க தலைவர் செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதுகுறித்து இன்னர்வீல் சங்கத் தலைவி சுதா கூறுகையில், பல்வேறு சமூக பணிகள் செய்து வரும் வேளையில் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, உலக நன்மை வேண்டியும், கொரோனா போன்ற தொற்று நோய்கள் பரவாமலிருக்கவும், மாணவ, மாணவியர் கல்வி வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும், கொரோனவால் முடங்கிய குமாரபாளையத்தின் அடையாளமாக திகழும் விசைத்தறி மற்றும் கைத்தறி ஜவுளி உற்பத்தி மீண்டும் செழித்திடவும் திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது என அவர் கூறினார்.

Tags:    

Similar News