குமாரபாளையத்தில் 3 கோவில்களில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை துவக்கம்

குமாரபாளையத்தில் உள்ள 3 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான யாக சாலை பூஜைகள் துவங்கியுள்ளன.

Update: 2021-10-23 11:45 GMT

குமாரபாளையம், சேலம் சாலையில் உள்ள மகா கணபதி, முனியப்பா சுவாமி, கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜை நடைபெற்றது.

குமாரபாளையம் , கோட்டைமேடு சாந்தபுரி நகரில்,  கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி,   அக். 22ல் காலை 07:00 மணிக்கு  காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அக். 23ல்,   முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இதை தொடர்ந்து,  நாளை அக்.24ல் அதிகாலை 03:00 மணிக்கு,  மூன்றாம் கட்ட யாக சாலை பூஜை, அதிகாலை 04:30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

இதேபோல், குமாரபாளையம் அபெக்ஸ் காலனியில் உள்ள நாகசுந்தரகணபதி, நாகேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, அக். 8ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. அக். 15ல் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது. அக். 22ல் பவானி கூடுதுறை முக்கூடலில் இறுதி தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு கோபுர கலசம் வைத்தல், முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றன.

அக். 24ல் அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், காலை 07:15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

அபெக்ஸ் காலனி நாக சுந்தரகணபதி, நாகேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடந்த  யாகசாலை பூஜைகள்.

குமாரபாளையம் சேலம் சாலையில் மகா கணபதி, முனியப்பா சுவாமி, கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவையொட்டி அக். 22ல் மாலை 03:00 மணிக்கு பவானி கூடுதுறை முக்கூடலில் இறுதி தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. அக். 23ல் முதல் மற்றும் இரண்டாம் கட்ட யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

நாளை, அக். 24ல் அதிகாலை 03:00 மணிக்கு மூன்றாம் கட்ட யாக சாலை பூஜைகள், அதிகாலை 04:15 மணிக்கு அனைத்து மூர்த்திகளுக்கும் சம காலத்தில் மகாகும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை,  விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News