குமாரபாளையம்: மூன்று மாநில வி.ஹெச்.பி. நிர்வாகி வருகை

குமாரபாளையம் பெருமாள் கோவிலுக்கு மூன்று மாநில வி.ஹெச்.பி. நிர்வாகி வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-05-11 17:00 GMT
சாமி தரிசனம் செய்யும் சரவணா கார்த்திக் சுவாமிகள்.

தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களுக்கு விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட சரவணா கார்த்திக் சுவாமிகள் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தார். இவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். புருஷோத்தம பெருமாள் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் முன்னிலையில் சரவணா கார்த்திக் சுவாமிகள், பெருமாளின் புகழ் குறித்து ஆன்மீக உரையாற்றினார். அனைவருக்கும் அருளாசி வழங்கினார். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News