குமாரபாளையம் நகராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் வழிகாட்டுதலில் கிருமிநாசினி மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Update: 2022-04-03 10:30 GMT

குமாரபாளையம் நகராட்சி பகுதியில்  கொசுமருந்து அடிக்கும் பணி நடந்தது.

கொரோனா பரவல் குறைந்த போதிலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் சேர்மன் வழிகாட்டுதலால் அனைத்து பகுதியிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது பற்றி சேர்மன் விஜய்கண்ணன் கூறும்போது

சமீபத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் பல கவுன்சிலர்கள் கொசுத்தொல்லை அதிகம் உள்ளதாக புகார் கூறினார்கள். கொரோனா பரவல் குறைந்த போதிலும் எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து வார்டுகளுக்கும் கொசு மருந்து மற்றும் கிருமிநாசினி மருந்து அடிக்க அறிவுறுத்திவுள்ளேன். பெரிய வீதிகள் மட்டுமின்றி சிறிய சந்துகளிலும் கூட கை தெளிப்பான் மூலம் கிருமிநாசினி மருந்து மற்றும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News